இந்திய அளவில் கொரொனா காரணமாக அனைத்து மாநிலங்களின் எல்லைகளும் மூடக்கப்பட்டு, அரசின் நிபந்தனைகளுடன் போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தமிழகத்தில் இருந்து வாரணாசிக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் சுமார் 126 பேர் வாரணாசியில் சிக்கி தவித்துள்ளனர். இதனையடுத்து அவர்களை பேருந்துகளின் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். அதன்படி, வாரணாசி சுற்றுலா சென்றவர்களுக்கு கொரொனா தொற்று உள்ளதா என்பதை அறிய திருவள்ளூரில் கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.







