கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் 11 லட்சத்தை எட்டியுள்ளது.
கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. தற்போது அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் கடுமையானப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம்: கொரோனா பாதிக்கபப்ட்டவர்களின் 10.9 லட்சமாக உள்ளது. பலியானவர்களின் 59.9 ஆயிரமாக உள்ளது. குணமானவர்களின் எண்ணிக்கை 2.28 லட்சமாக உள்ளது.
இந்தியா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2300 ஐ தாண்டியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக உள்ளது. குணமானவர்களின் எண்ணிக்கை 162 ஆக உள்ளது.
தமிழ்நாடு: நேற்று புதிதாக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102. இதோடு சேர்த்து 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 1. மற்றும் குணமானவர்களின் எண்ணிக்கை 4. மற்றவர்கள் ஸ்திரமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.







