---Advertisement---

தமிழகத்தில் மேலும் 6 பேருக்குக் கொரோனா உறுதி – அதிகரிக்கும் எண்ணிக்கை!

By Sri
Published on: March 27, 2020
---Advertisement---

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவை பொருத்த வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 730-ஐ கடந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் கொரோனாவால் 29 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் குணமாகியுள்ளனர். மற்ற நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரையில் ஏற்கனவே கொரோனா தொற்றின் மூலம் இறந்தவரின் குடும்பத்தில் மேலும் இருவருக்கும், ஈரோடு மற்றும் சென்னையில் தலா இருவரும் என 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாக சுகாதாரத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க