குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் ‘அஸ்னா’ புயலால் பல்வேறு குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் கட்ச் அருகே அரபிக்கடலில் உருவாகி இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குஜராத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக இதுவரை 29 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
1200 பேர் வெள்ளத்தில் சிக்கியிருந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் சுமார் 20,000 முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். தண்ணீர் அபாய அளவை கடைந்து பாய்ந்து வருவதால் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது.
தற்போது அரபிக்கடலில் பகுதியில் நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று இருக்கிறது. இது மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. நேற்று 11:30 குஜராத்தின் பூஜ் பகுதியில் இருந்து மேற்கு வடமேற்கே 190 கிலோமீட்டர் அருகே மையம் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து இருந்தார்கள்.
இதையடுத்த இரண்டு நாட்களில் இந்திய கடற்பகுதியை விட்டு கடந்து விடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. இந்த புயலுக்கு அஸ்னா என பாகிஸ்தான் பெயர் வைத்திருக்கின்றது. தற்போதைய சூழல் படி புயல் மேலும் வலுப்பெற வாய்ப்பு இல்லை. அதுமட்டுமில்லாமல் குஜராத்தில் நேற்று மாலை வெகுவாக குறைந்திருந்தது. வெறும் 4 பகுதிகளில் மட்டுமே 15 மில்லி மீட்டர் முதல் 26 மில்லி மீட்டர் வரை மழை பெய்திருந்தது.
இருப்பினும் குஜராத்தில் தீவிர முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிசைகள் மற்றும் பலவீனமான கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள பள்ளிகள் கோவில்கள் மற்றும் பிற கட்டிடங்களுக்கு இடம்பெயரும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கும். குஜராத் மக்களுக்கு இந்த புயல் சின்னம் மேலும் அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றது.













