பிரபல நடிகையான சோனாவின் வீட்டு சுவரை ஏறி குதித்து அவரிடம் கத்தியை காட்டி விரட்டிய இருவரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகை வந்தவர் சோனா. இவர் குசேலன் திரைப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்திருப்பார். தமிழில் பல படங்களில் கவர்ச்சி படங்களில் நடித்திருக்கின்றார். இவர் சென்னை மதுரவாயில் அடுத்த கிருஷ்ணா நகரில் வசித்து வருகின்றார்.
நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் கையில் கத்தியுடன் நடிகை சோனாவின் வீட்டு சுவர் ஏரி குதித்து மிரட்டி இருக்கிறார்கள். பின்னர் வீட்டின் வளாகத்தில் வெளிப்புறமாக வைத்திருந்த ஏசி-யை திருடி செல்ல முயற்சி செய்து இருக்கிறார்கள். அப்போது சோனா வீட்டில் வளர்த்து வரும் நாள் மர்ம நபரை கண்டதும் பயங்கரமாக குறைத்துள்ளது. நாயின் சத்தத்தை கேட்டு வீட்டிற்குள் இருந்த நடிகை சோனா வெளியில் வந்திருக்கின்றார்.
அப்போது கையில் கத்தியுடன் மர்ம நபர் ஏசி இயந்திரத்தை திருட முயற்சி செய்வதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் திருடன் திருடன் என்று கத்தி கூச்சலிட்ட உடனே மர்ம நபர் கையில் இருந்த கத்தியை காட்டி நடிகை சோனாவை மிரட்டி விட்டு வெளியே மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த நண்பருடன் தப்பு சென்று விட்டார்.
இதையடுத்து சோனா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து சோனாவிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 நபர்களை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.













