கொரோனாவால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை தான் மிகவும் எஞ்சாய் பண்ணுவதாக பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் வீடியோ வெளியிட்டு அதனால் ரசிகர்களின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு கடந்த ஒரு மாதமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல ஏழை எளிய மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். ஆனால் இயக்குனர் கரன் ஜோஹரோ தான் ஊரடங்கால் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக பல வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கடுப்பேற்றினார். மேலும் கொரோனா கிண்டல் மெஸேஜ்களையும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் கரணின் வீடியோக்களுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தனர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், தங்கள் உயிரை பொருட்பாடுத்தாது வேலை செய்கின்றனர். இதுபோன்ற நேரத்தில், கரன் ஜோஹர் இதுபோல வீடியோ வெளியிடலாமா எனக் கேள்வியெழுப்பினர்.
இதையடுத்து இயக்குனர் கரன் ஜோஹர் ‘போதிய பக்குவம் இல்லாமல், இதுபோல் செய்து விட்டேன். அதற்காக வருந்துகிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.







