---Advertisement---

செய்தியாளர்களின் சந்திப்பின்போது தெறிக்கவிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

By Sri
Published on: April 16, 2020
TN CM Edappadi Palanisamy
---Advertisement---

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்றைய தினம் செய்தியாளர்களை சந்திப்பின்போது கொரொனா தொடர்பான அறிவிப்புகளையும், தமிழக அரசின் மீது கோரப்பட்ட சர்ச்சைகளுக்கும் பதில்களை தெறிக்கவிட்டுள்ளார்.

அதன்படி, தமிழக அரசின் தீவர முன்னச்சரிக்கை நடவடிக்கையால் தமிழ்நாட்டில் கொரொனா கட்டுக்குள் இருப்பதாகவும், இன்னும் சில தினங்களில் கொரொனா பாதிப்பு படிபடியாக குறையும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் அளிப்பதாகவும், வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர்; ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை என்றும், துவரம் பருப்பு 500 மெட்ரிக் டன், மிளகு, கடுகு, சீரகம், வெந்தயம் 100 மெட்ரிக்டன் கொள்முதல் செய்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் அறிவித்திருந்தார். மேலும், புயல், சுனாமி வந்தாலும் மு.க.ஸ்டாலின் குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பார் என்று அரசின் மீது கோரப்பட்ட சர்ச்சைகளுக்கு பதில்களை கூறி தெறிக்கவிட்டுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.