---Advertisement---

Jason Sanjay Interview: அப்பா விஜய், அம்மா சங்கீதா பற்றி முதல்முறையாக மனம் திறந்த ஜேசன் சஞ்சய்! நெகிழ்ச்சிப் பின்னணி!

By Sri
Published on: July 18, 2026
பேட்டி ஒன்றில் மைக்ரோஃபோன் முன்னிலையில் புன்னகையுடன் பேசும் இளம் இயக்குநர் ஜேசன் சஞ்சய்.
---Advertisement---

தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரமும் தமிழக முதலமைச்சருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் களம் இறங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். கனடாவில் சினிமா மேக்கிங் படிப்பை முடித்த கையோடு, முன்னணி நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தை இயக்கி கோலிவுட்டில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்களில் ஜேசன் சஞ்சய் நடனமாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள் வின்டேஜ் விஜயை பார்ப்பது போல இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

பொதுவாகவே பொதுவெளியில் அதிகம் பேசாத ஜேசன் சஞ்சய், தற்போது தனது முதல் படம் ரிலீஸாக உள்ள நிலையில் தனது குடும்பம் மற்றும் பெற்றோர் குறித்து முதல்முறையாக மனம் திறந்துள்ளார். அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் சினிமா துறைக்குள் நுழைவது குறித்து அப்பா விஜய் மற்றும் அம்மா சங்கீதாவிடம் பேசிய தருணங்களைப் பகிர்ந்துள்ளார். அப்போது அவர்கள் இருவரும் மிகுந்த நேர்மறையான எண்ணங்களுடன் (Positive Vibes) பேசி தனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த நொடியில் தான் பெற்றோர் தன் மீது எந்த அளவிற்கு வலுவான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைத் தான் முழுமையாக உணர்ந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது படம் குறித்துப் பேசிய ஜேசன் சஞ்சய், “தற்போதைய சூழலில் பணத்தின் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது, ஆனால் உறவுகளின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. மற்றவர்கள் உங்களை நம்புகிறார்களோ இல்லையோ, உங்களை முதலில் நீங்கள் நம்ப வேண்டும் என்பதுதான் சிக்மா திரைப்படம் சொல்லும் முக்கியக் கருத்து” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நடிகர் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்கள் ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒதுக்கப்படும் என்பதால், தியேட்டர்கள் கிடைப்பதில் உள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டு சிக்மா திரைப்படத்தின் வெளியீட்டை ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளி வைக்கப் படக்குழு திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தந்தை மற்றும் மகனின் அடுத்தடுத்த ரிலீஸ்களைக் கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.