---Advertisement---

லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை – கொள்ளை அடித்தது யார் தெரியுமா?

By Sri
Published on: October 4, 2019
Trichy
---Advertisement---

திருச்சி லலிதா ஜூவல்லரியில் நகைகளை கொள்ளையடித்த கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

சமீபத்தில் திருச்சியில் உள்ள பிரபல லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை முகமுடி அணிந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். கடையின் பின்புறம் உள்ள சுவற்றில் துளையிட்டு அவர்கள் இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இதில் தொடர்புடையவர்கள் வடமாநில கொள்ளையர்கள் என முதலில் செய்திகள் வெளியானது.

lalitha jewellery

தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கையில் பையுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை போலீசர் பிடித்தனர். அதில் ஒருவன் தப்பி ஓடுவிட ஒருவன் மட்டும் சிக்கிக் கொண்டான். அந்த பையில் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இருந்தன. மணிகண்டனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் 8 பேர் கொண்ட கும்பலை வைத்து இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.