---Advertisement---

தூக்கமே வரல… மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கே சென்று பேசிய மம்தா பானர்ஜி…!

By Sri
Published on: September 14, 2024
---Advertisement---

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கே நேரில் சென்று பேசியிருக்கின்றார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஜூனியர் மருத்துவர்கள் அம்மாநில சுகாதார அமைச்சகமான ஸ்வஸ்திய பவன் முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போராடும் மாணவர்களின் பிரதிநிதிகளை 2 நாட்களுக்கு முன் தலைமைச் செயலகத்தில் வைத்து சந்தித்து பேசுவதற்கு மம்தா அழைத்திருந்தார். ஆனால் அந்த சந்திப்பை நேரலையில் ஒளிபரப்பினால் மட்டுமே நாங்கள் வருவோம் என்று கூறிய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் இரண்டு மணி நேரமாக மம்தா காலியான இருக்கைகளுக்கு முன்பு காத்திருந்தார்.

இதற்கிடையே மருத்துவர்கள் போராட்டத்தால் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை கிடைக்காமல் இதுவரை உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இந்த 29 பேரின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியும் கேட்காமல் மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மருத்துவர்களை சந்திக்க மம்தா பானர்ஜி நேற்று நேரிலேயே சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் மம்தாவை நோக்கி கோஷம் எழுப்பினார்கள். அவர்கள் முன்பு உரையாற்றிய மம்தா நான் உங்களின் மூத்த சகோதரியாக இங்கு வந்திருக்கின்றேன். முதலமைச்சராக அல்ல, எனது பதவி பெரிது கிடையாது. நேற்று இரவு நீங்கள் கொட்டும் மழையில் போராடிக் கொண்டிருந்தீர்கள்.

இதனால் நேற்று நான் தூங்கவே இல்லை. தயவு செய்து இப்படி செய்யாதீர்கள் என்று கூறுவதற்காக இங்கு வந்திருக்கின்றேன். உங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்று நான் வாக்களிக்கிறேன். உயிரிழந்த பயிற்சி மருத்துவருக்கு நீதி கிடைக்கும் என்று கூறியிருந்தார். மாநில அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் நல வாரியங்களை உடனடியாக நான் கலைப்பதாக மம்தா தெரிவித்திருந்தார்.

இந்த பிரச்சினையை தீர்க்க இதுவே தனது கடைசி முயற்சி எனக் கூறியிருந்தார். பின்னர் மம்தா அங்கிருந்து சென்றதைத் தொடர்ந்து ஊடகத்திடம் பேசிய மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நடத்தப்படாமல் எங்களின் கோரிக்கைகளில் நாங்கள் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Ketika Sharma smiling and expressing gratitude to Tamil cinema fans.

KETIKA SHARMA on Tamil Fans : “மொழி பாகுபாடு பார்ப்பதில்லை!” – தமிழ் ரசிகர்களை புகழ்ந்து தள்ளிய கெட்டிகா சர்மா!

Official release date poster of Jr NTR and Prashanth Neel's movie NTRNeel scheduled for June 11, 2027.

NTRNeel : “ஜூன் 11, 2027-ல் என்டிஆர் ராஜ்யம் ஆரம்பம்” – பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு; மே 20-ல் வெளியாகிறது மாஸ் ப்ரோமோ!

Actor Siddharth and Actress Trisha together in a promotional still for their 4th collaboration.

SIDDHARTH – TRISHA Reunion : 10 வருஷம் ஆச்சு! – மீண்டும் ஜோடி சேரும் சித்தார்த் – திரிஷா! எத்தனாவது படம் தெரியுமா?

Actor Ajith Kumar holding the Indian flag on the podium at Circuit de Spa-Francorchamps, Belgium.

Racing Star AJITH : பெல்ஜியத்தில் பறந்த இந்தியக் கொடி! – ரேசிங்கில் 2-வது இடம் பிடித்து அஜித் குமார் அணி சாதனை!

Actress Rukmini Vasanth posing in a stylish outfit for a high-fashion aesthetic photoshoot.

RUKMINI VASANTH Gallery : கண்களைக் கவரும் ருக்மிணி வசந்த்! – வைரலாகும் 5 புதிய புகைப்படங்கள்!

Actor-Director Dhanush and Actress Mrunal Thakur in a professional discussion during a recent photoshoot.

DHANUSH Directs Mrunal : தனுஷ் இயக்கத்தில் மிருணால் தாக்கூர்! – பெண் தெய்வமாக நடிக்கும் சீதா ராமம் நாயகி!