---Advertisement---

உடல் நிலையில் முன்னேற்றம்?…கள்ளக்குறிச்சியில் குறைந்து வரும் பதட்டம்…

Published on: June 25, 2024
kallakurichi
---Advertisement---

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி பகுதிகள் தான் கடந்த சில நாட்களாகவே அதிக கவனம் பெற்றிருக்கிறது. தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த விஷசாராய விவகாரத்தில் பலி எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் தொடர்ந்து பலருக்கும் சிகீட்சை வழங்கப்பட்து வருகிறது.

விஷசாராய உயிரிழப்பை அடுத்து அந்த பகுதிகளில் மரண ஓலங்களே ஒலித்து வந்தது. இப்போது அங்கேயிருந்த பதட்டமான சூழல் குறையத்துவங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

விஷசாராயம் குடித்து மருத்துவமனையில் உள் நோயாளிகளாக நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

Kallakurichi
Kallakurichi                                                                                              இந்நிலையில் அதில் தொன்னூரு பேரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் சொல்லியிருக்கிறது.

அதே போல இதுவரை எட்டு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததனால் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவத்தை அடுத்து கடந்த சில நாட்களாக இருந்த பதட்ட நிலை தற்போது லேசாக குறையத்துவங்கியுள்ளது.

அனுமதிக்கப்பட்டுள்ள உள் நோயாளிகளின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றார்கள். இந்த விஷயத்தில் ஆளும் திமுக அரசின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை வைத்த தமிழக எதிர்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பேரவை கூட்டத்தொடரில் பதில் கொடுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த துயர சம்பவம் நடந்ததுமே தமிழக அரசு மிக துரிதமாக செயல் பட்டதாகவும் சொன்னார் முதலமைச்சர்.  தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டு சிகீட்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதே தொடர் பிரார்த்தனையாக இருந்து வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Prominent Kollywood directors Mohan Raja and Shakthi Soundar Rajan working on sequel scripts.

தனி ஒருவன் 2 மற்றும் மிருதன் 2: மிரட்டலான சீக்வெல் படங்களின் ஸ்கிரிப்ட் பணிகள் தீவிரம்!

Actor Karthi and director PS Mithran discussing a scene during the production of Sardar 2.

சர்தார் 2 புதிய ஜானர் படம்: இயக்குனர் பி.எஸ். மித்ரன் மற்றும் நடிகர் கார்த்தியின் சுவாரஸ்யமான பேட்டி!

Official announcement banner featuring Keneeshaa's musical debut for An Ordinary Man.

கெனிஷாவின் மியூசிக் டெப்யூ: ரவி மோகன் இயக்கத்தில் ‘அன் ஆர்டினரி மேன்’ – நெட்ஃபிளிக்ஸ் வெளியீட்டுத் தகவல்!

Official first look poster for Shivarajkumar's upcoming film Picasso.

ஹட்ரிக் நாயகன் சிவராஜ்குமாரின் ‘பிகாசோ’: மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Official promotional still released by RKFI revealing Seeman's appearance in Seyon.

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில்: சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணைகிறார் செந்தமிழன் சீமான்!

Official title teaser announcement banner for Shanmugapandian's King And Queens.

சண்முக பாண்டியனின் ‘கிங் அண்ட் குயின்ஸ்’: டைட்டில் டீசரை வெளியிட்டு சிறப்பித்த நடிகர் சிவகார்த்திகேயன்!