---Advertisement---

உடல் நிலையில் முன்னேற்றம்?…கள்ளக்குறிச்சியில் குறைந்து வரும் பதட்டம்…

Published on: June 25, 2024
kallakurichi
---Advertisement---

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி பகுதிகள் தான் கடந்த சில நாட்களாகவே அதிக கவனம் பெற்றிருக்கிறது. தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த விஷசாராய விவகாரத்தில் பலி எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் தொடர்ந்து பலருக்கும் சிகீட்சை வழங்கப்பட்து வருகிறது.

விஷசாராய உயிரிழப்பை அடுத்து அந்த பகுதிகளில் மரண ஓலங்களே ஒலித்து வந்தது. இப்போது அங்கேயிருந்த பதட்டமான சூழல் குறையத்துவங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

விஷசாராயம் குடித்து மருத்துவமனையில் உள் நோயாளிகளாக நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

Kallakurichi
Kallakurichi                                                                                              இந்நிலையில் அதில் தொன்னூரு பேரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் சொல்லியிருக்கிறது.

அதே போல இதுவரை எட்டு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததனால் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவத்தை அடுத்து கடந்த சில நாட்களாக இருந்த பதட்ட நிலை தற்போது லேசாக குறையத்துவங்கியுள்ளது.

அனுமதிக்கப்பட்டுள்ள உள் நோயாளிகளின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றார்கள். இந்த விஷயத்தில் ஆளும் திமுக அரசின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை வைத்த தமிழக எதிர்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பேரவை கூட்டத்தொடரில் பதில் கொடுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த துயர சம்பவம் நடந்ததுமே தமிழக அரசு மிக துரிதமாக செயல் பட்டதாகவும் சொன்னார் முதலமைச்சர்.  தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டு சிகீட்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதே தொடர் பிரார்த்தனையாக இருந்து வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vijay Sethupathi holding a blood-stained weapon in an intense action-packed poster announcing the Slumdog teaser release date.

த்தக் கறையுடன் கத்தியை ஏந்தி நிற்கும் மக்கள் செல்வன்… மிரட்ட வரும் ‘ஸ்லம்டாக்’ பட டீசர்… வெளியீட்டு தேதியை லாக் செய்த படக்குழு!

Comedian Vadivelu sharing an emotional memory about how actor and director Rajkiran gave him a break and supported his early cinema life.

யார் அந்த உன்னதமான மனிதர்? “அன்னைக்கு அவர் மட்டும் சாப்பாடு போட்டு வளர்க்கலனா நான் இல்லை…” பேட்டியில் வடிவேலு சொன்ன ரகசியத்தால் உருகிய கோலிவுட்!

Director Sasi explaining the emotional reason behind choosing his upcoming movie title Noorusami in a recent interview.

இன்னைக்கும் பலரோட போன் ரிங்டோன் அதுதான்… புதிய படத்திற்கு நூறுசாமி என பெயர் வைக்க இதுதான் காரணமாம்… ரகசியத்தை உடைத்த இயக்குநர் சசி!

Actor Arya reportedly planning to make his directorial debut with a self-written script after finishing acting commitments.

தனுஷ் மற்றும் சிம்புவை தொடர்ந்து இயக்குநராக மாறும் ஆர்யா… கோலிவுட்டில் வெடித்த புதிய வதந்தி!

Actor Naga Chaitanya celebrates the auspicious launch of Dhootha Season 2 marking his debut as a producer.

தயாரிப்பாளராக மாறிய முன்னணி நடிகர்… தூதா 2 வெப் சீரிஸ் மூலம் நாக சைதன்யா தொடங்கிய புதிய அதிரடிப் பயணம்!

Buzz handles suggest actor and director Pradeep Ranganathan might block his next movie PR06 with AGS Entertainment.

மீண்டும் ஒன்னா சேரும் லவ் டுடே கூட்டணி… பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தைப் பற்றி கிளம்பிய மரண மாஸ் வதந்தி!