நடிகர் கார்த்தி நடிப்பில் எத்தனையோ படங்கள் வெளிவந்துள்ளது. அவற்றில் இந்த மூன்று படங்களை மட்டும் கார்த்தி மறக்காமல் வைத்துள்ளார் அந்த படங்கள் , பையா, சுல்தான், கொம்பன் ஆகிய மூன்று படங்கள் ஆகும்.
இந்த மூன்று படங்களில் கொம்பன் ஏப்ரல் 1ம் தேதியும் மற்ற இரண்டு படங்களும் ஏப்ரல் 2ம் தேதியும் வெளியாகியுள்ளன.
பையா எனக்கு முற்றிலும் புதிய கண்ணோட்டத்தைக் கொடுத்தது. நான் அறிமுகமாகி 8 வருடங்களுக்குப் பிறகு கொம்பன் என்னை மீண்டும் கிராம மக்களிடம் அழைத்துச் சென்றது. சுல்தான் என்னை குழந்தைகளுக்கு மீண்டும் அறிமுகப்படுத்தியது.. அனைத்தும் ஒரே தேதியில் வெளியிடப்பட்டது. அவர்களை மறக்க முடியாததாக மாற்றிய என் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் அன்பான ரசிகர்களுக்கு நன்றி என கார்த்தி தெரிவித்துள்ளார்.







