இன்று வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களும் கோவில் நடை அடைக்கப்பட்டிருக்கும்.
இந்த நிலையில் சகல விஷ்ணு ஆலயங்களிலும் இன்று முதல் வைகுண்ட ஏகாதசி விழா சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பக்தர்கள் யாருக்கும் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.
காஞ்சிபுரம் , திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டாலும் ஓமிக்ரான் பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கபடவில்லை.













