தமிழ்நாட்டில் சில வருடங்கள் முன்பு வேட்டி அணிந்த ஒருவரை ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் அனுமதிக்கவில்லை என பிரச்சினை எழுந்தது. இது பெரிய சர்ச்சைகளை கிளப்பியது. பல பெரிய ஹோட்டல் நிர்வாகங்கள் வேஷ்டி, சேலை என நம் நாட்டு உடைகளை மட்டும் அணிந்து செல்பவர்களை அனுமதிப்பதில்லை.
இது போல நேற்று டெல்லியில் ஒரு சம்பவம் நடந்தது. சேலை அணிந்து சென்ற அனிதா என்ற பெண்ணை பாருடன் கூடிய உணவகத்தில் அனுமதிக்க மறுத்து மேற்கத்திய உடைகளுக்கு மட்டுமே அனுமதி என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புடவை ஸ்மார் பிட் இல்லை என்றால் ஸ்மார்ட் அவுட்ஃபிட்க்கு விளக்கம் அளியுங்கள் நான் புடவை அணிவதை நிறுத்தி விடுகிறேன் என அந்த பெண் ஆவேசமாக கூறியுள்ளார்.













