அனைத்து நாட்டுடனும் ராஜதந்திர உறவுகளை நாங்கள் விரும்புகிறோம் என தாலிபன் செய்தி தொடர்பாளர் சபியுல்லா கூறியுள்ளார்.
தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில், தலிபான்கள் அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தலைவரான முல்லா அப்துல் கனி பரதார் ஆப்கனின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அனைத்து நாடுகளுடனும் சிறந்த ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை விரும்புகிறது என்று அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் சபிஹூல்லா தெரிவித்துள்ளார்.













