சாதாரண மனிதன் நினைத்தால் எப்படிப்பட்ட உயரங்களை வேண்டுமானலும் அடையலாம் என்பதை மெய்ப்பிப்பதை போல் எவ்வளவோ சம்பவங்கள் நடந்துள்ளன. அதை எல்லாம் படித்து விட்டு நாம் அடுத்த கணமே மறந்து விடுவோம்.
ஆனால் சாதனையாளர்கள் மறைவதில்லை அவர்கள் தொடர்ந்து தம் துறைகளில் காலூன்றி ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் துப்புரவு தொழிலாளி ஆஷா காந்தாரி. எப்படியாவது கலெக்டர் ஆக வேண்டும் என்ற நோக்கில் சிவில் சர்வீஸஸ் தேர்வுக்கு படித்து அதில் வெற்றி பெற்றார்.
2 குழந்தைகளின் தாயான இவர் விரைவில் உதவி கலெக்டராக நியமிக்கப்பட உள்ளார்.













