---Advertisement---

ஒரே குடும்பத்தில் 4 பேர் மர்ம மரணம்… நடந்தது என்ன…? மராட்டியத்தில் சோகம்..!

By Sri
Published on: September 20, 2024
---Advertisement---

மராட்டிய மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் திடீரென்று உயிரிழந்திருப்பது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

மராட்டிய மாநிலம் துலே என்ற மாவட்டத்தில் சமர்த் காலனிக்கு உட்பட்ட பிரமோத் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் பிரவீன் மன்சிங். வேளாண் உர விற்பனை செய்து வருகின்றார். இவரின் மனைவி கீதா பிரவீன், ஒரு ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு நித்திஷ் பிரவீன் மற்றும் சௌரம் பிரமின் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக இவர்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியில் வராமல் இருந்திருக்கிறார்கள். இவர்களின் வீட்டில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் இரண்டு முறை வந்து வீட்டு கதவை தட்டி விட்டு திரும்பி சென்றிருக்கின்றார். 4 நாட்களாக சத்தம் எதுவும் இல்லாத நிலையில் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் பிரவீனின் சகோதரரிடம் தகவல் கொடுத்து இருக்கின்றார்.

அவர் நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது பிரவீன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். அவருடைய மனைவி மகன்கள் விஷம் குடித்து உயிரிழந்திருக்கிறார்கள். உடனடியாக அங்கிருக்கும் காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.

அவர்களுக்கு வசதியில் எந்த குறையும் இல்லை. ஆனால் அவர்கள் ஏன் உயிரிழந்தார்கள் எதற்காக அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். இது கொலையா தற்கொலையா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவமானது அப்பகுதியில் வசிப்பவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Mari Selvaraj and legendary composer Ilaiyaraja in a file photo.

மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’: காயது லோஹர், பிரியங்கா மோகன் மற்றும் இசைஞானி இளையராஜா குறித்து இயக்குநர் மனம் திறப்பு!

Prominent Kollywood directors Mohan Raja and Shakthi Soundar Rajan working on sequel scripts.

தனி ஒருவன் 2 மற்றும் மிருதன் 2: மிரட்டலான சீக்வெல் படங்களின் ஸ்கிரிப்ட் பணிகள் தீவிரம்!

Actor Karthi and director PS Mithran discussing a scene during the production of Sardar 2.

சர்தார் 2 புதிய ஜானர் படம்: இயக்குனர் பி.எஸ். மித்ரன் மற்றும் நடிகர் கார்த்தியின் சுவாரஸ்யமான பேட்டி!

Official announcement banner featuring Keneeshaa's musical debut for An Ordinary Man.

கெனிஷாவின் மியூசிக் டெப்யூ: ரவி மோகன் இயக்கத்தில் ‘அன் ஆர்டினரி மேன்’ – நெட்ஃபிளிக்ஸ் வெளியீட்டுத் தகவல்!

Official first look poster for Shivarajkumar's upcoming film Picasso.

ஹட்ரிக் நாயகன் சிவராஜ்குமாரின் ‘பிகாசோ’: மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Official promotional still released by RKFI revealing Seeman's appearance in Seyon.

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில்: சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணைகிறார் செந்தமிழன் சீமான்!