இன்று வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது. இந்த புயலுக்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4ம் தேதி வரை கடும் மழை உள்ளதால் எங்கும் வெளியில் செல்ல வேண்டாம் எனவும், மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என முதல்வரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மீட்பு படையினர் ஜேசிபி வாகனங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகளுடன் பாதிப்பு ஏற்படும் இடங்களில் முகாமிட வேண்டும் – முதலமைச்சர் கூடுதலாக ஆயிரம் மின்வாரிய பணியாளர்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகளை தயார் நிலையில் வைத்திருக்க முதலமைச்சர் உத்தரவு இட்டுள்ளார்.
புயல் வீச வாய்ப்புள்ளதால், டிச.4ம் தேதி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும் – முதலமைச்சர் வேண்டுகோள் கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி மருந்து, பசுந்தீவனங்களை போதிய அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.













