---Advertisement---

நூறு நாள் வேலைத்திட்டத்தின் சம்பளத்தை உயர்த்தியது தமிழக அரசு! மகிழ்ச்சியில் மக்கள்!

By Sri
Published on: April 18, 2020
---Advertisement---

கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து மத்திய அரசு நூறு நாள் வேலைத்திட்டத்தின் சம்பளத்தை உயர்த்திய நிலையில் இப்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் அவர்களின் பொருளாதாரத் தேவைகளை சமாளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து மத்திய நிதியமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட்ட போது கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் சம்பளத்தை உயர்த்துவதாக அறிவித்தார்.

அதையடுத்து அதை உறுதி செய்து தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதில்  100 நாள் வேலை திட்டத்தின் ஒருநாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தி மத்திய அரசின் உத்தரவின்படி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின் படி ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் நூறுநாள் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.