மிக கொடூரனான அசுரனை முருகப்பெருமான் அழித்த இடம் திருச்செந்தூர். தளபதி வீரபாகு தலைமையில் முருகப்பெருமான் அசுரனை திருச்செந்தூர் கடற்கரையில் முருகன் அழித்தார். அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி கொண்டாடப்பட்டாலும் திருச்செந்தூர் கடற்கரையில் கந்த சஷ்டி விழா மிக புகழ்பெற்றது ஏனென்றால் அந்த வரலாறு நடந்த இடம் அல்லவா.
கந்த சஷ்டிக்கு பக்தர்கள் விரதம் இருந்து இங்கு வருவார்கள். இலங்கை, சிங்கப்பூர் மலேசியா, பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து விரதம் இருந்து முருகனை தரிசிப்பார்கள்.
இந்த வருடம் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் கந்த சஷ்டி விழாவில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.













