---Advertisement---

மலைமேல் அருள்புரியும் யோக நரசிம்மர்

Published on: September 26, 2020
---Advertisement---

ராணிப்பேட்டை அருகே உள்ளது சோளிங்கர் இந்த ஊரில் யோக நரசிம்மர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தீராத பல பிரச்சினைகளுக்கு இங்குள்ள யோகநரசிம்மரை வழிபட பல பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

சோளிங்கர் வந்து அங்குள்ள யோக நரசிம்மர் கோவில் அடிவாரத்தில் இருந்து 1300 படிகள் கடந்து சென்றால் யோக நரசிம்மரை தரிசிக்கலாம்.

நரசிம்மர் பொதுவாக துஷ்ட சக்திகளை விரட்டுபவர். நம்முள் இருக்கும் துஷ்ட சக்திகளையும் தீராத நம்முடைய துஷ்ட தோஷங்களை விரட்டுபவர் இவர். சுற்றிலும் உள்ள மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், சென்னை,ஆந்திராவின் சித்தூர் , உட்பட பல்வேறு இடங்களில் இருந்து இந்த நரசிம்மரை காண பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

நினைத்தது நினைத்தபடி நிறைவேற இங்குள்ள நரசிம்மர் அருள்புரிகின்றார். 1300 படி ஏறி செல்ல செல்ல இயற்கை எழில் சூழ அழகாய் இருக்கும். ஆஞ்சநேயரின் அம்சமான குரங்குகள் இம்மலையில் அதிகம் உண்டு. சில குரங்குகள் வரம்பு மீறி சேட்டைகளும் செய்யும். கையில் அதிக பொருட்கள் இல்லாமல் சென்றால் நலம்.

மேலே சென்று யோக நரசிம்மரை தரிசித்தால் வாழ்க்கையில் வளம்பெறலாம்.

பக்த பிரகலாதனுக் காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். விஸ்வாமித்திரர் இத் தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிபட்டு வரம் பெற்றாராம். அதே போல் தங்களுக்கும் பெருமாளின் தரிசனம் கிடைக்க வேண்டும் எனும் ஆவல் கொண்டு அவர்கள் இங்கு தவமிருந்தனர்.

ராமாவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன் ஆஞ்சநேயரிடம், “இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதைப் போக்கி வை’’ என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்ய, அது முடியாமல் போனதால் ஸ்ரீராமனை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார்” என்கிறது இக்கோவிலின் ஸ்தல புராணம்.

கடைசியில் ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தை தரிசித்துப் பூரித்த ஆஞ்ச நேயரிடம், ‘நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என் பக்தர்களின் குறைகளை போக்கி அருள்வாயாக!’ என அருளினார்! அதன்படி நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் யோக ஆஞ்சநேயராக சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Janhvi Kapoor and Sreeleela teaming up for a new film directed by Umesh Bist.

முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!

Directors Andrew Louis and Thiagarajan Kumararaja discussing Pocket Novel.

தியாகராஜன் குமாரராஜா கைகளுக்குச் சென்ற ‘பாக்கெட் நாவல்’ கதை: இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஓபன் டாக்!