மத்தியப்பிரதேசத்தில் உள்ள
கந்த்வா என்ற மாவட்டத்தில் நேற்று மார்ச் 30 தனது குடும்ப உறுப்பினர்களுடன் திருமண விழா ஒன்றில் கலந்துகொள்ள இந்தூருக்கு பேருந்தில் சென்றிருக்கிறார். கந்த்வா- இந்தூர் நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது,சிறுமிக்கு வாந்தி வந்துள்ளது பேருந்தின் ஜன்னல் வழியாக அந்த பெண் தலையை வெளியே நீட்டி வாந்தி எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக பேருந்தின் எதிரே வேகமாக வந்த டிரக் மோதியதில் சிறுமியின் தலை துண்டானது. அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாய் கண் எதிரே சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதன் பிறகு பிறகு லாரி டிரைவர் தப்பினார். லாரி டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் லாரி டிரைவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.







