கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்வதில் தகராறு ஏற்படும் நிலையில் தன்னுடைய கல்லூரி வளாகத்தில் அடக்கம் செய்யலாம் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நரம்பியல் மருத்துவர் ஒருவர் திடீரென நேற்று மாரடைப்பு வந்து இறந்தார். இதையடுத்து அரசு அதிகாரிகள் அவரை அடக்கம் செய்ய சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள கல்லறைக்கு எடுத்து சென்றபோது அங்குள்ள மக்கள் சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் கற்களை வீசியும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவமானது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்பட்சத்தில், அவர்களை அடக்கம் செய்வதற்காக தனது ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு நிலப்பகுதியை தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.







