விஜய் சமீபத்தில் ரோல்ஸ் ராய்ஸ் காருக்காக வரி கட்ட மறுத்த விவகாரத்தில் கோர்ட் அவரை கண்டித்து இருந்தது. இந்த நிலையில் இதை வைத்து விஜய் எதிர்ப்பாளர்கள் அனைவரும் விஜயை சாடினர்.
இந்த நிலையில் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது.
அன்புத்தம்பி விஜய்! அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது! துணிந்து நில்! இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை! தொடர்ந்து செல்! “ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு” என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வா தம்பி! என கூறியுள்ளார்.







