ரஜினிகாந்த் சமீபத்தில் இந்தியாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை பெற்றார். அனைவரும் ரஜினிகாந்த்தை வாழ்த்திய நிலையில் தற்போது கவிஞர் வைரமுத்துவும் தனது வித்தியாசமான வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது
பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த். ஊர்கூடி வாழ்த்துவோம். கமல்ஹாசன் – பாரதிராஜா – இளையராஜா என்று பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் ஒன்றிய அரசின் கண்களுக்குக் காட்டுவோம் என வைரமுத்து கூறியுள்ளார்.









