---Advertisement---

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறை எழிலகத்தில் திறப்பு

Published on: February 25, 2022
---Advertisement---

உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான போரை தொடுத்து வருகிறது. போரை நிறுத்த சொல்லி உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்ற போதிலும் ரஷ்ய அதிபர் புடின் கொஞ்சம் கூட கேட்பதாய் இல்லை.

இன்றும் உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது.

இதனால் அங்கு வாழும் இந்தியர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு வாழும் தமிழர்களை காப்பாற்ற சென்னை எழிலகத்தில் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் சிக்கி தவிப்பவர்கள் இங்கிருக்கும் அவரது பெற்றோர்கள் உறவினர்கள் 1070 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.