இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி நடக்கிறது. எல்லா கிரகங்களையும் விட சனீஸ்வரர்தான் மற்றொரு கிரகத்திற்கு மாற அதிக காலம் எடுத்து கொள்கிறார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி கோவில்களில் கொண்டாடப்படும் சனிப்பெயர்ச்சியே சரியான ஒரு சனிப்பெயர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
அதன்படி திருநள்ளாறு, குச்சனூர் உள்ளிட்ட கோவில்களில் இன்று சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது.
திருநள்ளாறில் கோவிட் 19 நெகட்டிவ் சான்றிதல் வைத்திருந்தால் மட்டுமே சனிப்பெயர்ச்சி விழாவுக்கு செல்ல முடியும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அங்குள்ள நள தீர்த்தத்தில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று 27.12.2020 அதிகாலை திரயோதசி திதியில் காலை 4.51க்கு சனி பெயர்ச்சியாகி தனுசில் இருந்து அவரது சொந்த வீடான மகரத்திற்கு சென்றது.













