கொரொனா தாக்கத்தால், இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனைடுத்து, ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கில் சிறு தளர்வுகள் விதிக்கப்பட்டாலும், சாலைகள், மால்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் விறிச்சோடி தான் காணப்படுகின்றது.
இந்நிலையிலும் கூட, பல்வேறு இடங்களில் கொலை, கொளை என பல திடுக்கிடும் அதிர்ச்சி சம்பவங்கள் அறங்கேறி வருகின்றது. அதில் ஒன்றுதான், கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் கே.ஜி.எஃப்யில் 1000 அடி ஆழத்தில் திருட போன திருடர்களுக்கு நேர்ந்துள்ளது.
கே.ஜி.எப் (K .G .F ) அல்லது கோலார் தங்க சுரங்கம், கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில், பங்காருபேட்டை தாலுக்காவில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். கோலார் தங்கச்சுரங்கத்தில் 1000 அடி ஆழம் உள்ளே இறங்கி தங்கம் திருட ஒரு கும்பல் முயன்றுள்ளது. 1000 அடி அழத்தில் சென்ற திருடர்களுக்கு பொதுமான ஆக்சிஜன் கிடைக்காததால், அவர்களில் 3 பேரும் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். அதில் இருவரின் சடலம் மீட்க்கப்பட்டு அவர்கள் குறித்த விசாரணையும் நடைபெற்று வருகின்றது.







