அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. கேரளாவிலும் இந்த திட்டம் பெரிய அளவில் இருக்கின்ற நிலையில் தமிழ்நாட்டில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்கப்பட்டது. இன்னும் 100 நாளில் இந்த திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்படும். இதற்கான நடவடிக்கையை முதல்வர் முக.ஸ்டாலின் எடுப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.













