Connect with us

சென்னையில் விநாயகர் ஊர்வலம்… இந்த தேதிகளில் தான் நடத்த வேண்டும்… வெளியான அறிவிப்பு…!

Latest News

சென்னையில் விநாயகர் ஊர்வலம்… இந்த தேதிகளில் தான் நடத்த வேண்டும்… வெளியான அறிவிப்பு…!

சென்னையில் விநாயகர் ஊர்வலம் செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 7-ம் தேதி கொண்டாடப்படுகின்றது. தமிழகம் முழுவதும் அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டு பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட உள்ளது.

சென்னையில் 1500 பெரிய சிலைகள் பொது இடங்களில் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதை தவிர சிறிய சிலைகள் பலரது வீட்டில் வைத்து வழிபாடு செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்படும் நாளிலிருந்து 7 நாட்கள் கழித்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

அந்த வகையில் வருகிற ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால் அன்றிலிருந்து ஏழு நாட்கள் கழித்து செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் பூஜைக்காக வைக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளது. சென்னை மற்றும் தாம்பரம் காவல் ஆணையராக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு இடங்களில் விநாயகர் சிலை கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி பட்டினம் பாக்கம் சீனிவாசபுரம் நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவெற்றியூர் பாப்புலர் எடை மேடு உள்ளிட்ட நான்கு இடங்களிலும், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ராமகிருஷ்ணன் நகர் கடல் பகுதியிலும் சிலைகள் கரைக்கப்பட உள்ளது. மேலும் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு 17 வழித்தடங்களை போலீசார் ஏற்கனவே அடையாளம் கண்டு வைத்திருக்கிறார்கள்.

அந்த வழித்தடங்கள் வழியாக மட்டுமே சிலைகள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், வடபழனி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கோயம்பேடு, அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் பட்டினம்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் கடலில் கரைக்கப்பட உள்ளது.

அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட தென் சென்னை பகுதியில் வைக்கப்படும் சிலைகள் நீலாங்கரை பல்கலை நகரில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  ஆர்கேநகர் தங்கச்சாலை ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்படும் சிலைகள் காசிமேடு மீன் பிடித்துறை முகத்திலும், திருவொற்றியூர் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள சிலைகள் திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடு பகுதிகளிலும் கரைக்கப்பட உள்ளன.

விநாயகர் சிலைகளை வைக்கும் இடங்களில் தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவையில்லாமல் மத உணர்வை தூண்டும் நோக்கில் ஒளிபரக்கியில் பேசக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர் முழுவதும் சுமார் 15,000 பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.

More in Latest News

To Top