தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நேரத்தில் அரசியல்வாதிகளிடையே வார்த்தைப்போர் எதுவும் வராமல் இருந்தால்தான் ஆச்சரியம் அந்த வகையில் முதல்வர் எடப்பாடி, எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் சண்டை ஓய்வது இல்லை.
அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குறித்து முதல்வர் வெளியிட்டிருக்கும் அறிக்கை.
ஆட்சியில் இல்லாதவர்கள் எது வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், ஆட்சியிலிருப்பவர்கள் ஒரு திட்டத்தை சிந்தித்து, கணக்கிட்ட பிறகு தான் கூற முடியும். அப்படி, எங்கள் அரசு கணக்கிடும் போது அதை எதிர்கட்சி தலைவர் தெரிந்து கொண்டு கூறிவிட்டு, அவர் சொல்லி செய்வதைப்போல தவறாக பரப்பி வருகிறார்.













