தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என தென்னக மொழிகள் இந்திய மொழிகள் அனைத்திலும் பாடி புகழ்பெற்றவர் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்.
ஆயிரம் நிலவே வா என்ற அடிமைப்பெண் பாடல் மூலம் அவர் அறிமுகமானாலும் அவர் இரண்டாவதாக பாடிய சாந்தி நிலையம் படப்பாடலான இயற்கை எனும் இளைய கன்னி என்ற பாடல்தான் முதலாவதாக ரிலீஸ் ஆனது.
அனைத்து மொழிகளிலும் 40000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்த பாடகர் எஸ்.பி.பி.
எம்.ஜி.ஆர், சிவாஜி ,ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, தற்போதைய தனுஷ் வரை மூன்று தலைமுறை நடிகர்களுக்கு பாடியவர் எஸ்.பி.பி.
இவர் மறைந்தபோது இவருக்கு 70வயதுக்கு மேல் ஆகி இருந்தாலும் சின்னப்பையனுக்கு பின்னணி பாடினால் கூட அந்த சின்னப்பையனின் குரல் போலவே இருப்பதாக நாம் எண்ணுவதுதான் இவரது வெற்றி. அந்த அளவு இவரது பாடல்கள் என்றும் இளமையாக இருக்கும்.
கடந்த வருடம் லேசான கொரோனா தொற்றினால் அவதிப்பட்டு வந்த எஸ்.பி.பி முகநூலில் வந்து நான் ஆஸ்பத்திரி செல்கிறேன் லேசாக உடம்பு சரியில்ல என்று போஸ்ட் போட்டுவிட்டுதான் சென்றார். ஆனால் நாள் ஆக ஆக இவரின் உடல்நிலை மோசமானது நுரையீரல் மற்றும் சுவாசப்பாதைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 25 அன்று இயற்கை எய்தினார்.
அவரது குரலில் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்தே படத்தில் அவரது பாடல் வர உள்ளது அவரது ரசிகர்களுக்கு சற்று ஆறுதல்.
இன்று முதலாம் ஆண்டு நினைவு நாள் காணும் எஸ்.பி.பியை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் போற்றி வருகின்றனர். நாமும் அவரை நினைவு கூர்வோம்.







