நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் தனது தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டு தனது தயாரிப்பாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகைகள் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் தங்கள் அழகுப் பராமரிப்பை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் உடல் எடை மற்றும் முக அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது சம்மந்தமாக ஊரடங்கால் தான் சந்தித்துள்ள் பிரச்சனை குறித்து நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தனது தற்போதைய புகைப்படத்தைப் பதிவிட்டு அதில் ‘என்னுடைய புருவங்கள் வளர்ந்து தடித்துவிட்டன. இதனால் எனது முந்தைய படங்களின் கண்ட்டியுனிட்டி தற்போது பாதிக்கப்படும். இதற்காக எனது தயாரிப்பாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். இதே போன்ற பல பிரச்சனைகள் பல நடிகைகளுக்கும் இருப்பதாகவும் ஆனால் யாரும் வெளியே சொல்வதில்லை எனவும் தெரிகிறது.







