கேரளாவில் உள்ள பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் பம்பையிலிருந்து மலைமேல் இருக்கும் ஐயப்பனை காண மலைமேல் நடந்து செல்ல வேண்டும். பெருவழிப்பாதை என்ற எரிமேழி வழியாகவும் செல்லலாம்.
இந்த கோவிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பன் சரண கோஷம் முழங்க வருகை தருவது வழக்கம்.
இந்த வருடம் கொரோனா தொற்று போன்ற துயர சூழல் காணப்படுவதால் இங்கு செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 15ம் தேதி அன்று மகர விளக்கு மற்றும் மண்டலபூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்படுகிறது. தை மாதம் பொங்கள் திருநாளுக்கு பிறகுதான் சபரிமலை நடை அடைக்கப்படும்.
இந்த வருடம் இங்கு செல்வதற்கு அரசு மருத்துவமனையில் தனக்கு கொரோனா இல்லை என்ற சர்ட்டிபிகேட்டுடன் தான் வரவேண்டும் என கேரள அரசு அறிவித்துள்ளது.













