---Advertisement---

பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் இளையராஜா வேதனை- வக்கீல் தகவல்

Published on: December 28, 2020
---Advertisement---

இசைஞானி இளையராஜா 40 ஆண்டுகளாக பலவிதமான சினிமா பாடல்களை கம்போஸ் செய்த இடம்தான் பிரசாத் ஸ்டுடியோ. தற்போதைய நிர்வாகத்துக்கும் இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோவை காலி செய்வதில் தகராறு ஏற்பட்டு அது நீதிமன்றம் வரை சென்றது.

அங்கு ஒரு நாள் தியானம் செய்ய வேண்டும் அங்கு நான் செல்ல வேண்டும் என இளையராஜா நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில்

பிரசாத் ஸ்டுடியோவிற்குள் சென்று தியானம் செய்யவும், உடைமைகளை எடுத்துவரவும் இளையராஜாவிற்கு அனுமதி அளித்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். இளையராஜாவுடன் அவரது ஓர் உதவியாளர் மற்றும் இரண்டு இசை உதவியாளர்கள் செல்லவும் நீதிபதி அனுமதி அளித்த நிலையில்

இன்று காலை 9 மணியளவில் இளையராஜா பிரசாத் ஸ்டியோவுக்கு வரவுள்ளதாகத் கூறப்பட்டது ஆனால், இளையராஜா வரவில்லை.

அவருடைய வழக்கறிஞர்கள் மட்டுமே வந்தனர் இளையராஜா அறையின் பூட்டு உடைக்கப்பட்டுப் பொருட்கள் அனைத்தும் குடோனில் வைக்கப்பட்டிருந்ததால் இளையராஜா மனவேதனையில் இருப்பதாகத் தகவல் கூறுகின்ற நிலையில்

இந்த விவகாரம் தொடர்பாக இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் பத்திரிகையாளர்கள் மத்தியில் கூறியது

“இளையராஜா அறையின் சாவி அவரிடம் உள்ளது. ஆனால், இன்று காலை வந்து பார்த்தால் அந்த அறையே இல்லை. அந்த அறை தகர்க்கப்பட்டு, அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் குடோனில் வைக்கப்பட்டுள்ளது. அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதைச் சரிபார்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தங்களுடைய பிரத்யேக அறையே இல்லை. அது இருந்ததிற்கான சுவடே இல்லை என்பதை இளையராஜாவிடம் தெரிவித்தோம். இதைக் கேட்டவுடன் அவர் மிகவும் மனமுடைந்துவிட்டார்.

‘அந்த அறையையும், அதிலிருக்கும் பொருட்களையும் பார்க்க வேண்டும் என்ற முனைப்பில்தான் வரவேண்டும் என்று சொன்னேன். அந்த அறையே இல்லை என்று சொன்னால், நான் அங்கு வந்து என்ன செய்வது, எனக்கு மனவேதனை அதிகமாகும். என்னால் தாங்கிக்கொள்ள இயலாது’ என்று இளையராஜா கூறினார். இதனால் அவர் வரவில்லை.

இங்கு ஒரு பெரிய ரெக்கார்டிங் தியேட்டர் உள்ளிட்ட 5 அறைகள் உள்ளன. அவருடைய பத்ம விபூஷண் விருது கூட அந்த அறையில்தான் உள்ளது. அந்த அறைக்குத்தான் அனுமதி மறுத்துவிட்டார்கள்.

மிக முக்கியமான இசைக் குறிப்புகள், புகைப்படங்கள், விருதுகள் என அத்தனையும் குடோனில் போட்டு வைத்திருப்பதை இளையராஜாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று இளையராஜாவுடன் ஆலோசித்துப் பின்னர் முடிவெடுக்கப்படும்”.

இவ்வாறு வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Janhvi Kapoor speaking in an interview about personal boundaries and consent on film sets following the Peddi movie deleted scenes controversy.

தியேட்டர்களில் நீக்கப்பட்ட ‘பெத்தி’ பட சர்ச்சை காட்சிகள்… உடனடியாக வாய்திறந்த ஜான்வி கபூர்… பரபரக்கும் சினிமா உலகம்!

Tamil actor Jayam Ravi (Mohan Ravi) releases an official public apology statement for violating the Chennai High Court media gag order.

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மீடியாக்களிடம் பேசிய விவகாரம்… நடிகர் ரவிமோகன் வெளியிட்ட பகிரங்க மன்னிப்பு அறிக்கை!

Ulaganayagan Kamal Haasan announced as the chief guest for director Singeetham Srinivasa Rao's Sing Geetham musical event in Chennai.

உலகநாயகன் கமல்ஹாசன் கொடுக்கும் மாஸ் சர்ப்ரைஸ்… சென்னையில் நாளை கூடும் பிரம்மாண்ட கூட்டணி… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Actor Arya, director Nikhil Muraly, and the team celebrating the official shooting wrap up of Arya 40 movie.

புன்னகையோடு முடிந்த ஆர்யாவின் மாஸ் படப்பிடிப்பு… அடுத்த அதிரடிக்கு தயாராகும் ‘ஆர்யா 40’ படக்குழு… வைரல் பிக்!

Director SS Rajamouli and writer Vijayendra Prasad setup details highlighting the 30-minute Rama vs Kumbhakarna war episode in Varanasi.

இந்திய சினிமாவே ஆடித்தீர்க்கப் போகும் 30 நிமிட மரண மாஸ் போர்… ராஜமௌளி படத்தின் கதையை உடைத்த விஜயேந்திர பிரசாத்!

Actor Pavish featured in an official announcement poster for Zinema Media and Entertainment's Production No 3 presented by Dinesh Raj.

கண்களில் கனவோடு களம் இறங்கும் புதிய கூட்டணி… இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் மாஸான சினிமா அப்டேட்!