---Advertisement---

ஊறுகாய் போடுறவங்க அமைச்சராக கூடாதா…? நிர்மலா சீதாராமன் கேள்வி…!

By Sri
Published on: September 6, 2024
---Advertisement---

ஏன் ஊறுகாய் போடுபவர்கள் நிதி அமைச்சர் ஆகக்கூடாது என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

சென்னையில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதில் மகளிர் எழுச்சி என்ற தலைப்பில் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் பசுமை புரட்சி வெண்மை புரட்சி போலவே தமிழ்நாட்டில் தற்போது டிஜிட்டல் புரட்சி உருவாகி இருக்கின்றது. இதனால் ஜிஎஸ்டி வரிகள் உட்பட அனைத்தும் டிஜிட்டல் மயமாகி இருக்கின்றது. இந்தியாவில் நடந்துள்ள டிஜிட்டல் புரட்சியை கண்டு உலக நாடுகளே ஆச்சரியம் அடைந்து இருக்கின்றன.

மேலும் ஊறுகாய் போட்டுக் கொண்டிருந்த நபரை நிதி அமைச்சராக ஆக்கியுள்ளார்கள் என்று பலரும் என்னை விமர்சிக்கிறார்கள். என்னை பொறுத்தவரை ஊறுகாய் போடுவதும் இழிவான வேலை இல்லை மக்களுக்காக சேவை செய்வதும் இழிவான வேலை இல்லை என்று அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கின்றார் நிர்மலா சீதாராமன்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.