---Advertisement---

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்க்கு உதயநிதி மரியாதை

Published on: November 29, 2020
---Advertisement---

அந்தக்காலத்தில் இனிமையான பல பாடல்கள் எழுதியவர் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அந்தக்காலத்தில் வந்த பல படங்களில் தத்துவார்த்தமான பாடல்களை அதிகம் எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், தூங்காதே தம்பி தூங்காதே, சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா போன்ற உயரிய தத்துவப்பாடல்களை எழுதியவர் இவர்.

நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வரும் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.