கடந்த வெள்ளிக்கிழமையன்று கர்ணன் படம் வெளியாகியது. நெல்லை மாவட்டம் கொடியன்குளம் சம்பவத்தை உள்ளடக்கிய கதையாக இந்த கதை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு பல தரப்பிலும் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்து வருகிறது தனுஷின் நடிப்பை பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக கண்ணபிரான் என்ற கேரக்டரில் வில்லதனம் கலந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இதனால் நட்ராஜின் இந்த நடிப்பை பார்த்து அவரை போனில் பலரும் திட்டி வருகின்றனராம்.
இன்னொரு பக்கம் ஹிந்து அமைப்புகள் சில வில்லத்தனமான கதாபாத்திரத்திற்கு கண்ணபிரான் என எப்படி பெயர் வைக்கலாம் என கேட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் டுவிட்டரில் நடராஜ் கூறியிருப்பது, என்ன திட்டதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்…கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்..phone messagela..திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி என நடராஜ் கூறியுள்ளார்.
என்ன திட்டதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்…கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்..phone messagela..திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி…🙏🙏🙏
— N.Nataraja Subramani (@natty_nataraj) April 11, 2021







