---Advertisement---

பனிச் சுமையால் உயிரிழந்த மகள்… தாயார் எழுதிய உருக்கமான கடிதம் வைரல்…!

By Sri
Published on: September 20, 2024
---Advertisement---

பனிச்சுமை காரணமாக மகள் உயிரிழந்த நிலையில் தாயார் அந்த நிறுவனத்திற்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த அன்னா செபாஸ்டியன் என்பவர் எர்னெஸ்ட் அண்ட் & யங் என்ற நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் வேலைக்கு சேர்ந்தார். கடந்த ஜூலை 20ஆம் தேதி பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய அன்னா செபாஸ்டியன் அவரின் அறையில் தற்கொலை செய்து உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பு கார்ப்பரேட் ஊழியர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அன்னா செபாஸ்டியன் மரணத்திற்கு அவர்களின் அலுவலகத்தில் கொடுத்த பணிச்சுமை தான் காரணம் என்று அவரின் தாயார் அனிதா எர்னெஸ்ட் அந்த நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் மொமாடிக்கு கடிதம் எழுதியிருக்கின்றார். அதில் அன்னாவிற்கு இதுதான் முதல் வேலை. உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய அவர் மிகுந்த ஆர்வமுடன் இருந்தார். ஆனால் நான்கு மாதங்களில் பனிச் சுமையால் அவர் உயிரிழந்தார்.

இரவு நீண்ட நேரமும் வார இறுதி நாட்களில் அவர் அதிக வேலை செய்திருக்கின்றார். பெரும்பாலான நாட்கள் மிக சோர்வுடன் தான் வீட்டுக்கு திரும்பினார். புதிதாக வேலை சேர்ந்தவர்களுக்கு முதுகெலும்பு உடையும் அளவுக்கு பணிகள் கொடுக்கப்படுவது என்ன நியாயம்? பள்ளி மற்றும் கல்லுரிகளில் அன்னா முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். சிஏ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்.

உங்கள் நிறுவனம் கொடுத்த அனைத்து வேலைகளையும் அவர் சிறப்பாக செய்தார். இருப்பினும் பனிச்சுமை அவரை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதித்திருக்கின்றது. இந்த நிறுவனத்தில் சேர்ந்த பல ஊழியர்கள் பணிச்சுமை தாங்க முடியாமல் ராஜினாமா செய்திருக்கிறார்கள். அன்னாவின் மேலாளர் பணி நேரம் முடிந்த பிறகும் அவர்களிடம் நிறைய வேலை வாங்கி இருக்கின்றார் .கூடுதல் நேரம் வேலைக்கு வருமாறு கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கின்றார்.

அது மட்டும் இல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணிபுரிய வைத்திருக்கிறார்கள். அன்னாவின் இறுதி சடங்குக்கு கூட நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை. அவரது மேனேஜருக்கு தகவல் கொடுத்தும் எந்த பதிலும் இல்லை. எனது மகளின் உயிரிழப்பு அந்த நிறுவனத்தின் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்.

நாங்கள் அடைந்த துயரமும் அதிர்ச்சியும் வேறு குடும்பத்தால் தாங்க முடியாது” என்று தெரிவித்திருக்கின்றார். அன்னாவின் தாயார் எழுதிய கடிதமானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் அந்த நிறுவனத்தை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் இதனை வழக்காக பதிவு செய்து தொடர்ந்து அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Lokesh Kanagaraj motivational quote advising young filmmakers that he made his first short film with just 4000 rupees.

“என் முதல் படத்தை வெறும் 4,000 ரூபாயில்தான் எடுத்தேன்..” புதிய இயக்குநர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த சீக்ரெட் சக்சஸ் டிப்ஸ்!

Producer KJR Rajesh giving a bold interview about Gen Z crowd backing TVK Vijay, Pradeep Ranganathan, and Blast movie box office success.

“வீட்லதான் உட்காரணும், புதுசுங்க வந்து தூக்கிட்டுப் போயிட்டே இருக்கும்..” பெரிய ஹீரோக்களின் சம்பள திமிரை உடைத்த கேஜேஆர் ராஜேஷ்!

Super Good Films officially announces the theatrical re-release of evergreen classic hit movie Thulladha Manamum Thullum starring Vijay and Simran.

90ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் காவியம்…. மீண்டும் தியேட்டருக்கு வருது தற்போதே கொண்டாட்டத்திற்கு ரெடியான ரசிகர்கள்!!

South Indian actor Dulquer Salmaan launching the first single track Sigma Style from the movie SIGMA today evening.

இன்னைக்கு சாயங்காலம் செம ட்ரீட் இருக்கு…. சிக்மா படத்தோட ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்யப்போகும் முன்னணி ஸ்டார்!

Bollywood actress Janhvi Kapoor visiting Tirumala Tirupati temple seeking Lord Balaji blessings and celebrating the success response of her movie Peddi.

திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் ஜான்வி கபூர்! பெத்தி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்காக உருகிய நடிகை!!

Actress Trisha Krishnan thanking Upasana Konidela on Instagram for sending a special hamper filled with traditional homemade Telugu food and pickles.

மெகா குடும்பத்தில் இருந்து வந்த சர்ப்ரைஸ் பாக்ஸ்; நள்ளிரவில் உருகிய நடிகை திரிஷா.. பின்னணியில் இருக்கும் சுவாரசிய சங்கதி!