தமிழில் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மோகன். எண்பதுகளில் சினிமா உலகை பெரிய அளவில் வலம் வந்தவர் மோகன். இவரது நடிப்பில் வெளிவந்த பயணங்கள் முடிவதில்லை, உதயகீதம், இதயக்கோயில், பிள்ளை நிலா, மெல்ல திறந்தது கதவு, பாடு நிலாவே, தென்றலே என்னை தொடு, நினைக்க தெரிந்த மனமே, விதி, மெளன ராகம், ரெட்டை வால் குருவி என அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் படங்களாகின.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது ஒரு மோகன் படமாவது கண்டிப்பாக ரிலீஸ் ஆகி விடும் அந்த அளவு மோகனுக்கு படங்கள் குவிந்தது.
மோகனுக்கு பெண் ரசிகைகளும் அதிகம். மோகன் காதல் நாயகனாக மட்டும் அல்லாமல் வில்லத்தனமும் செய்தார். நூறாவது நாள் படத்தில் சைலண்ட் டெரர் வில்லனாகவும் விதி படத்தில் நெகட்டிவ் கேரக்டரிலும் நடித்தார்.
மோகன் நடிப்பில் பாசப்பறவைகள் படத்துக்கு பிறகு அவருக்கு புகழ் சேர்க்கும் படங்கள் வரவில்லை. உருவம் படத்தில் மிகவும் கோரமான முகம் உள்ளவராக நடித்தார் அது எல்லாம் அழகாக மோகனை ரசித்த பலருக்கு பிடிக்கவில்லை.
இன்று வரை மோகன் ஏதாவது ஒரு படத்தில் அவ்வப்போது நடிக்கத்தான் செய்கிறார். காலங்கள் கடந்தாலும் மோகனின் புகழ் இன்று வரை அவருக்கு அதிகமாகவே உள்ளது.
இன்று நடிகர் மோகனுக்கு பிறந்த நாள் நாமும் அவரை வாழ்த்துவோம்.







