பல வருடமாக அரசியலுக்கு வருவார் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு வழியாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தே விட்டார். இதற்கு முன் தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் பலமுறை ரசிகர்களை அழைத்து பேசிய ரஜினிகாந்த் இப்போ சொல்றேன் அப்போ சொல்றேன் என சொல்லி வந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
மீம்ஸ் கிரியேட்டர்கள் ரஜினி ரசிகர்களுக்கு வயதாகி விட்டது என்ற அடிப்படையில் மீம்ஸ் தயாரித்து வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் ஒரு வழியாக கட்சி பற்றிய அறிவிப்பு டிசம்பர் 31 ல் வரும் என தெரிவித்துள்ளார். வரும் ஜனவரியில் அவர் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் லிங்குசாமி புலி வருது .. புலி வருதுனு சொன்னாங்க .. ஆனா இப்போ சிங்கமே வந்துருச்சு. வாழ்த்துக்கள் சார். என கூறியுள்ளார்.








