---Advertisement---

அறைக்குள் நுழையும்போதே ரத்த வெள்ளத்தில் இருந்த மருத்துவர்… வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…!

By Sri
Published on: September 2, 2024
---Advertisement---

அறைக்குள் நுழையும் போதே மருத்துவர் ரத்த வெள்ளத்தில் இருந்ததாக சஞ்சய் ராயின் வக்கீல் கவிதா சர்க்கார் நீதிமன்றத்தில் வாதாடி இருக்கின்றார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ இடம் கைமாற்றப்பட்டு பலகட்ட விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சஞ்சய்ராயின் ப்ளூடூத் ஹெட்செட் செமினார் ஹாலில் கண்டெடுக்கப்பட்ட தடயங்கள் அடிப்படையிலும் சஞ்சீவி ராய்தான் குற்றவாளி என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. இருப்பினும் அவர் நிரபராதி என்பதை நிறுவும் வகையில் அவரின் வக்கீல் கவிதா சர்க்கார் சில விஷயங்களை தெரிவித்து இருக்கின்றார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது சஞ்சய் ராயிடம் உண்மையை கண்டறியும் பாலிகிராப்ட் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அந்த சோதனையில் சஞ்சய் ராயிடம் 10 கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் பெண்ணை கொலை செய்த பிறகு என்ன செய்தாய் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நீங்கள் கேட்கும் கேள்வியே தவறு, நான் கொலை செய்யவே இல்லை என்று தெரிவித்தார்.

உண்மை கண்டறியும் சோதனையில் நான் செமினார் ஹாலுக்கு செல்லும்போது அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் சுயநினைவு இன்றி கிடந்ததாகவும் அறிக்கையில் தெரிவித்திருந்தார். அந்த பாலிகிராஃப்ட் டெஸ்ட் அறிக்கை படி சம்பவம் நடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி இரவு செமினார் ஹாலுக்குள் நுழையும் போது அந்த பெண் மருத்துவர் மயங்கிய நிலையில் உடல் முழுவதும் ரத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகின்றது.

எனவேதான் அவர் அந்த அறையை விட்டு வெளியே ஓடி வந்தேன் என்று தெரிவித்திருந்ததாக கவிதா சர்க்கார் கூறியிருந்தார். இதையடுத்து நீதிபதிகள் ஏன் இதை முதலிலேயே சஞ்சய் ராய் கூறவில்லை. போலீஸ் கைது செய்த போது நான் தான் செய்தேன் என்று ஒப்புக்கொண்டார் என்று கேள்வி எழுப்பினார்.

சஞ்சய் ராய் பயத்தில் இருந்ததாகவும் தான் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள் என்று எண்ணி இதுபோன்று கூறியதாக தெரிவித்திருக்கின்றார். யாரோ அவருக்கு முன்பாகவே அந்த இடத்திற்கு சென்று இந்த சம்பவத்தை செய்திருப்பதாகவும் ,உண்மையான குற்றவாளி வேறு எங்கோ ஒளிந்து இருக்கின்றான்” என்று கவிதா சர்க்கர் தெரிவித்து இருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actors Tovino Thomas and Basil Joseph featured in a vibrant digital poster announcing the Athiradi OTT release date on SonyLIV.

தியேட்டர்களில் 50 கோடி வசூலித்த மரண மாஸ் ஹிட் படம்… திடீரென ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த சோனி லிவ்!

Actor Vijay Sethupathi holding a blood-stained weapon in an intense action-packed poster announcing the Slumdog teaser release date.

த்தக் கறையுடன் கத்தியை ஏந்தி நிற்கும் மக்கள் செல்வன்… மிரட்ட வரும் ‘ஸ்லம்டாக்’ பட டீசர்… வெளியீட்டு தேதியை லாக் செய்த படக்குழு!

Comedian Vadivelu sharing an emotional memory about how actor and director Rajkiran gave him a break and supported his early cinema life.

யார் அந்த உன்னதமான மனிதர்? “அன்னைக்கு அவர் மட்டும் சாப்பாடு போட்டு வளர்க்கலனா நான் இல்லை…” பேட்டியில் வடிவேலு சொன்ன ரகசியத்தால் உருகிய கோலிவுட்!

Director Sasi explaining the emotional reason behind choosing his upcoming movie title Noorusami in a recent interview.

இன்னைக்கும் பலரோட போன் ரிங்டோன் அதுதான்… புதிய படத்திற்கு நூறுசாமி என பெயர் வைக்க இதுதான் காரணமாம்… ரகசியத்தை உடைத்த இயக்குநர் சசி!

Actor Arya reportedly planning to make his directorial debut with a self-written script after finishing acting commitments.

தனுஷ் மற்றும் சிம்புவை தொடர்ந்து இயக்குநராக மாறும் ஆர்யா… கோலிவுட்டில் வெடித்த புதிய வதந்தி!

Actor Naga Chaitanya celebrates the auspicious launch of Dhootha Season 2 marking his debut as a producer.

தயாரிப்பாளராக மாறிய முன்னணி நடிகர்… தூதா 2 வெப் சீரிஸ் மூலம் நாக சைதன்யா தொடங்கிய புதிய அதிரடிப் பயணம்!