இந்திய ரயில்வே தனது புதிய லக்கேஜ் விதிமுறைகளை அறிவித்து, பயணிகளுக்கு லக்கேஜ் எடை மற்றும் அளவுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை செயல்படுத்தியுள்ளது. இப்போதிருந்து ரயிலில் பயணம் செய்யும் போது எவ்வளவு லக்கேஜ் எடுத்துச் செல்லலாம், எடை மீறினால் கட்டணம் எவ்வளவு, லக்கேஜ் பரிசோதனை எப்படி நடக்கும் என்று எல்லாமே தெளிவாக இருக்கிறது.

ஏசிக்செல் முதல் வகுப்பு பயணிகளுக்கு: 70 கிலோ, ஏசிக்செல் இரண்டாம் வகுப்பு: 50 கிலோ, ஏசிக்செல் மூன்றாம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் பயணிகளுக்கு: 40 கிலோ, பொதுவான பயணிகளுக்கு: 35 கிலோ இலவச லக்கேஜ் அனுமதி வழங்கப்படுகிறது. மேலுமொரு தள்ளுபடி; ஒவ்வொரு பயணிக்கும் 10 கிலோ கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. 5–12 வயது குழந்தைகள் பாதி அளவு லக்கேஜ் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்.
பிரதான ரயில் நிலையங்களில் லக்கேஜ்ஜை, எலக்ட்ரானிக் எடை இயந்திரம் மூலம் பரிசோதிக்கப்படும். பெரிய அளவு, இடத்தை நிறைக்கும் லக்கேஜ் கூடுதல் கட்டணத்திற்கு உட்படும். எடை மீறினால் ஒரு கிலோக்கு ரூ.30, பெரிய லக்கேஜ் அளவு மற்றும் எடைக்கு ஏற்ப கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் போன்றவை இலவச அனுமதியில் சேராது; அவற்றை தனியாக பதிவு செய்யவேண்டும்.
மேலும், புதிய விதிமுறைகளில் டிசம்பர் 2026 முதல், ரயில் டிக்கெட் இல்லாமல் பிளாட்ஃபாரத்திற்கு செல்ல முடியாது. விசிட்டர்கள் மட்டும் பிளாட்ஃபார்ட் டிக்கெட் கொண்டு செல்ல வேண்டும். இது விமான நிலையப் போன்று போர்டிங் பாஸ் மாதிரி செயல்படும்.
இந்த புதிய விதிமுறைகள் பயணிகளுக்கு லக்கேஜ் பற்றி தெளிவான கட்டுப்பாடுகளை வழங்கி, பயண அனுபவத்தை ஸ்மூத்தாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்கும். பயணத்துக்கு முன் உங்கள் லக்கேஜ் எடை, அளவு மற்றும் கட்டணங்களை சரிபார்த்து செல்லுவது நல்லது.
- சினிமாவின் சமீபத்திய செயல்பாடுகளை அடித்து துவம்சம் செய்யும் தயாரிப்பாளர்
- ரஜினியின் பரட்டைகதாபாத்திரம் உருவானது எப்படி- பாரதிராஜாவின் விளக்கம்
- ஒரு காலத்தில் பக்தி பட பாடல் என வியந்த பாடல்- ஸ்ரீகிருஷ்ணகானம்
- கரகாட்டக்காரன் டைப்ல வந்த படம்- வில்லுப்பாட்டுக்காரன் எப்படி
- அஜீத் அறிமுகமான அமராவதி கதை

