தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அமமுக சார்பில் அக்கட்சி தலைவர் தினகரன் போட்டி இடுகிறார். கடந்த முறை ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தினகரன் இந்த முறை கோவில்பட்டியில் நிற்கிறார். இரண்டு தொகுதியில் நிற்கலாம் என்றால் ஆர்.கே நகர் தொகுதியிலும் மனுத்தாக்கல் செய்திருப்பேன் என்றிருக்கிறார் இவர்.
இவர் வெற்றி பெற்றாலும் கோவில்பட்டியில் இருக்க மாட்டேன் என கட்சியின் தேர்தல் பிரிவு பிரதிநிதியாக உள்ள மாணிக்கராஜா எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் அவர்தான் என்னை இங்கு போட்டியிட கேட்டுக்கொண்டார் என தினகரன் கூறியுள்ளார்













