---Advertisement---

கோமாதா அருள் பெற சித்தர்கள் காட்டிய வழிமுறைகள்

Published on: March 14, 2022
---Advertisement---

உலகத்தில் நாம் வழிபட்டு வரும் நாம் அறிந்த அனைத்து தெய்வங்களும்,நாம் அறியாத எல்லா தெய்வங்களும் வாசம் செய்யும் ஒரே ஒரு உயிரினம் எது தெரியுமா?
நமது நாட்டில் வாழ்ந்து வரும் நாட்டுப் பசுதான்!

1947 வரை  பாரதம் முழுவதும் 100 கோடி நாட்டுப் பசுக்கள் இருந்தன;நமது ஜனத்தொகை 30 கோடியாக இருந்தது;தற்போது 2022 ஆகின்றது;இப்போது நமது ஜனத்தொகை 130 கோடியைக் கடந்துவிட்டது;நாட்டுப் பசுக்களின் எண்ணிக்கை 5 கோடி இருந்தால் அதுவே அதிகம்;

 

பசுவின் பெருமைகள்,கோவில்களின் ஆன்மீக முக்கியத்துவம்,பெண் இனத்தின் மகிமைகள்,விவசாயத்தினுள் புதைந்திருக்கும் தெய்வீக ரகசியங்கள் இந்துக்களாகிய நமக்கே தெரியாமல் போய்விட்டது.

கடுமையான சாபங்கள் மொத்தம் 13 என்று நமது சனாதன தர்மம் வரையறுத்துள்ளது;இந்த 13 சாபங்களை விடவும் கொடியது

 

 

நாட்டுப் பசுவின் அருளாசியைப் பெற சில வழிமுறைகளை கோ சித்தர்கள் தெரிவித்துள்ளார்கள்;கோ பூஜை செய்தால் கோடி மடங்கு தோஷங்கள் நீங்கும்;

கோ சம்ரக்ஷ்ணம்:ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை கோசாலைகளில் இருக்கும் நாட்டுப் பசுக்களுக்கு வயிறு நிறைய உணவு இட வேண்டும்;அன்று மட்டும் பால் கறக்கக் கூடாது;அதை அதன் கன்றுகளுக்கே விட்டுவிட வேண்டும்;ஒரு பசு ஒரு நாளுக்கு எத்தனை லிட்டர் பால் தருமோ அதை அந்த கோசாலை நிர்வாகியிடம் நாம் கொடுத்துவிடவேண்டும்;இப்படி நாம் செய்யும் நாள் அன்று நிச்சயமாக நமது முன்னோர்களும்,நமது முன்னோர்களில் யாராவது சித்தரோ,ரிஷியோ பிறந்து வாழ்ந்திருந்தால் அவர்கள் அந்த கோசாலைக்கு சூட்சுமமாக வருகை தந்து உங்களுக்கு ஆசிகளையும்,வரங்களையும் அள்ளித் தருவார்கள்;

கோவலம்: உங்கள் ஊரில் யாரிடம் நாட்டுப் பசு கன்றோடு இருக்கின்றதோ,அவரிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும்;அன்று முழுவதும் உங்கள் சொந்தச் செலவில் அவைகளுக்கு உணவு இடுதல் வேண்டும்;நாட்டுப் பசுவின் உரிமையாளரின் துணையோடு அந்த நாட்டுப் பசுவையும்,கன்றையும் அழைத்துக் கொண்டு உங்கள் ஊரை வலம்வர வேண்டும்; இதனால்,ஊருக்கு இருந்து வந்த அனைத்து சாபங்களும் விலகிவிடும்; கிராமங்களில் வாரம் ஒருமுறையோ அல்லது மாதம் ஒருமுறையோ இப்படி ஓராண்டு வரை செய்வது நன்று;

கிராமம் எனில் ஒரே ஒரு நாட்டு பசுவை அதன் கன்றோடு ஊரை வலம் வரச் செய்யும் போது,ஊர் மக்கள் அனைவரையும் அந்த நாட்டுப் பசுவின் பின்னால் கையால் கும்பிட்டவாறு வலம் வருவது நன்று;ஒரு சிலர் மட்டும் பின்வரும் செயலைச் செய்ய வேண்டும்;

குங்கிலியம்,அகில்,சந்தனம் இட்ட சாம்பிராணி தூபத்தை அடர்த்தியாக இட்டவாறு எதாவது ஒரு அல்லது பல மந்திரங்களை ஜபித்தவாறு வலம் வருவது நன்று;ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்டுப் பசுக்கள் இருந்தால்,அவைகள் அனைத்தையும் அழைத்துக் கொண்டு வலம் வரலாம்;

பஞ்சகவ்யத்தை உள்ளூரில் இருக்கும் கோசாலை அல்லது நாட்டு பசுவை வைத்திருக்கும் விவசாயியிடம் வாங்குங்கள்:அமேஸான் டாட் காம் அல்லது பிளிப்கார்ட்டிடம் வாங்கக் கூடாது;கடுமையான பிணிகள்,கர்மவினைகள்,செய்வினைகள்,தோஷங்களை நிவர்த்தி செய்யும் ஆன்ம சக்தி பஞ்சகவ்யத்திற்கு உண்டு;

பஞ்சகவ்யம் சிறந்த சித்த வைத்திய,ஆயுர்வேத வைத்திய மருந்து ஆகும்;சகல விதமான தோல் நோய்களையும் தீர்த்துவிடும் அற்புதமான மருந்து;

பஞ்ச கவ்யத்தினால் கணபதிக்கு சதுர்த்தி மற்றும் சதுர்த்தசி திதி நாட்களில் அபிஷேகம் செய்யலாம்;

பஞ்ச கவ்யத்தினால் முருகக் கடவுளுக்கு சஷ்டி அன்று அபிஷேகம் செய்யலாம்;
பஞ்சகவ்யத்தினால் மஹாவிஷ்ணுவுக்கு ஏகாதசி அன்று அபிஷேகம் செய்யலாம்;
பஞ்ச கவ்யத்தினால் சிவலிங்கம்,நடராஜர்,பைரவர்,சரபேஸ்வரர்,வீரபத்திரருக்கு அபிஷேகம் செய்யலாம்;

பஞ்ச கவ்யத்தினால் பிரதோஷம் தோறும் நந்திக்கு அபிஷேகம் செய்யலாம்;
பஞ்ச கவ்யத்தினால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யலாம்;
பஞ்ச கவ்யத்தினால் குலதெய்வத்திற்கு அமாவாசை மற்றும் வளர்பிறை பஞ்சமி தோறும் அபிஷேகம் செய்யலாம்;
பஞ்சகவ்யத்தினால் காவல் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யலாம்;
பஞ்சகவ்யத்தினால் வீட்டு தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யலாம்;
இழந்த சுயகவுரவத்தையும்,இழந்த சொத்துக்களையும் திரும்பப் பெற விரும்புவோர் ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரம் வரும் நாள் அல்லது அமாவாசை அன்று அருள்மிகு நாகநாதர் கோவிலில் இருக்கும் மூலவருக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும். மன்னார்குடி அருகில் இருக்கும் பாமணி என்ற ஊரில் இந்த ஆலயம் இருக்கின்றது;

1000 நாட்டுப் பசுக்கள் பிறந்தால்,1001 வதாக ஒரு காராம்பசு பிறக்கும்;காராம்பசுவின் மூலமாக தயார் செய்யப்பட்ட பஞ்சகவ்யம் பிற பஞ்சகவ்யத்தை விடவும் பல கோடி மடங்கு தெய்வீக சக்தி நிரம்பியது ஆகும்;

பஞ்சகவ்யத்தை கோலில் அபிஷேகத்திற்கு தானம் செய்த பின்னரே வீடு,தொழிற்சாலைகளுக்கு தெளிக்க வேண்டும்;பஞ்ச கவ்யத்தினை வீட்டில் மூன்று வேளைகளும்,கோவிலுக்குள் மூன்று வேளைகளும் தெளிக்கலாம்;

பஞ்சகவ்யத்தை விவசாய நிலத்தில் தெளிக்கலாம்;
பஞ்சகவ்யத்தை மரத்தின் இலை,கிளை,தண்டு,வேர் என அனைத்திலும் தெளிக்கலாம்;

பசு,விவசாயம்,பஞ்சகவ்யம் போன்றவைகளை காத்து வரும் மஹாவராகியை தினமும் ஜபிப்போம்;நமது நாட்டு விவசாயம் மூலமாகவே தன்னிறைவு அடைய வேண்டி கொள்வோம்!!!

ஒரிஜினல் பஞ்சகவ்யம் உங்கள் ஊரில் இருக்கும் நாட்டு மருந்துக்கடைகள்,சித்த வைத்தியர்கள்,கோசாலைகளில் கிடைக்கும்;

பஞ்சகவ்யத்தை அனுபவம் மிக்க சித்த/ஆயுர்வேத வைத்தியரின் ஆலோசனைப்படி தினமும் சிறிது அருந்தலாம்;எவ்வளவு அருந்த வேண்டும்? எப்போது எப்படி அருந்த வேண்டும் என்ற விதிமுறைகளை அறிந்த பின்னர் அருந்துவது நன்று;இந்த பதிவினை வாசித்ததும் அருந்துவதற்குப்பதிலாக தீர விசாரித்து,இதன் தெய்வீகத் தன்மையை முழுமையாக அறிந்து முறையாக அருந்தலாம்;

இந்த கட்டுரையை பிரிண்டு எடுத்து உங்கள் ஊரில் இருக்கும் பக்தர்கள்,தேச பக்தர்களுக்கு விநியோகம் செய்வதும் ஒரு வித புண்ணியமே!!!

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

சிவராஜயோக ஜோதிடர்

வீரமுனி சுவாமிகள்

9629439499

ராஜபாளையம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress and producer Kushboo Sundar speaking emotionally during the official movie success meet hosted by Avni Cinemax banner.

“பெண்கள் சொந்தக் காலில் நிக்கணும், யாருக்கும் குறைந்தவர் இல்லை!”.. அவனி சினிமாக்ஸ் வெற்றி விழாவில் உடைந்த குஷ்பூ.. மூத்த மகள் கல்யாணம் மற்றும் ‘பொம்மை’ அனி குறித்து நெகிழ்ச்சியான பேச்சு!

Compilation graphic of hot upcoming OTT releases like Save The Tigers Season 3, Athiradi, and The Creator on streaming platforms.

“இந்த வாரம் ஓடிடியில் செம்ம ட்ரீட் இருக்கு!”.. ஜூன் 19 & 20-ல் நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகும் மெகா படங்கள் மற்றும் சீரிஸ்.. முழு ரிலீஸ் லிஸ்ட் இதோ!

Actors Victory Venkatesh, Nandamuri Kalyan Ram, and Director Anil Ravipudi during the official pooja ceremony of VenkyAnil5 NKRAR2 project.

“தியேட்டரில் வெறித்தனமான ஃபன் கேரண்டி!”.. வெங்கடேஷ் – கல்யாண் ராம் கூட்டணியில் அனில் ரவிபுடியின் மெகா மல்டிஸ்டாரர் லோடிங்.. பூஜையுடன் தொடங்கிய பிரம்மாண்டப் பயணம்!

Actor-director Vishal in a powerful posture from the official promotional banner of Magudam movie first single Rise of Linga.

“மாஸ் காட்ட வரும் விஷாலின் ரைஸ் ஆஃப் லிங்கா!”.. இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் ‘மகுடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ஜிவி பிரகாஷின் அதிரடி ட்ரீட்!

Director Shankar son Arjith Shankar along with director H Vinoth and Jason Sanjay during the official movie launch event of Lover Boy.

“டைட்டில் லவ்வர் பாய்.. பக்காவா லாக் செய்த காம்போ!”.. கோலிவுட்டில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித்.. விஜய் மகன் சஞ்சய், இயக்குநர் ஹெச் வினோத் நேரில் வாழ்த்து!

Producer Ishari K Ganesh of Vels Film International sharing upcoming movie release updates during a corporate press meet.

“அடுத்தடுத்து தியேட்டருக்கு வரும் வேல்ஸ் படங்கள்!”.. ஐசரி கணேஷ் வெளியிட்ட அதிரடி லோடிங்.. ஜூலை 3-ல் ரிலீஸாகும் ‘கட்டா குஸ்தி 2’!