மலைகளின் இளவரசி என அழைக்கப்படுவது கொடைக்கானல். வாரத்தின் சனி மற்றும் ஞாயிறு பள்ளி விடுமுறை நாட்கள். கோடைக்கால விடுமுறைகளில் இங்கு கூட்டம் அதிகம் நிலவும். மற்ற இடங்களை விட கொடைக்கானலில் விதவிதமான இடங்கள் அதிகம் உண்டு.
குளுகுளுவென வித்யாசமான இடங்களில் புகைப்படம் எடுக்க அழகை இயற்கையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகை தருகின்றனர்.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக அடைப்பதும் திறப்பதுமாக இருக்கும் கொடைக்கானல் நாளை முதல் முழுவதும் திறக்கப்படுகிறது.
இங்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த பைன் பாரஸ்ட், குணா குகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களும் நாளை முதல் முழுவதுமாக திறக்கப்படுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.













