கேரளாவில் கொரோனாவுக்கு 4 மாதக் குழந்தை ஒன்று பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா எதிர்ப்பை மிகச்சிறப்பாக எதிர்கொள்ளும் மாநிலமாக கேரளா உள்ளது. அங்கு இதுவரை 438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பலி எண்ணிக்கை 2 ஆக உள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்குப் பின் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கேரள மக்களை சோகத்தில் ஆழ்த்தும் விதமாக மலப்புரம் மாவட்டம் பையநாடு பகுதித் தம்பதியினரின் 4 மாத பெண் குழந்தைக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கோழிக்கோடு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இதையடுத்து தற்போது கேரளாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த செய்தியால் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில் குழந்தைக்கு மஞ்சேரியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளித்த 5 டாக்டர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.







