கர்நாடகாவின் குடகு மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார். என்னவென்றே தெரியாத தீராத வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து ஸ்கேன் செய்து பார்த்ததில் வயிற்றில் வித்தியாசமான கட்டி இருந்துள்ளது.
என்ன கட்டி என பார்க்கையில் வயிற்றில் முடி போல கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறிது சிறிதாக அந்த பெண் வயிற்றுக்குள் சென்ற தலைமுடி ஒரு கட்டி போல உருவெடுத்து இருந்திருக்கிறது இதனால்தான் அந்த பெண் வயிற்று வலியால் துடித்துள்ளார்.
தற்போது அந்த கட்டி அகற்றப்பட்டுள்ளது.







