கணவன் மனைவி பிரச்சினைகள் இல்லாத வீடுகளே இல்லை இருந்த போதிலும் சிலர் சண்டை போட்டுவிட்டு சிறிது நேரத்தில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். சிலர் சைக்கோவாக மாறி கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்ய கூட துணிந்து விடுகிறார்கள்
அப்படியான ஒரு சைக்கோதான் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிடிபட்டுள்ளார். நீதிமன்ற பெண் ஊழியரான அந்த பெண்ணை அவரது கணவன் காலில் கொடூரமாக வெட்டி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி அவரது மனைவியான அந்த பெண்ணை கட்டி போட்டு கொடுமைப்படுத்தியுள்ளான்.
பாலப்பள்ளம் நடுவு என்ற கிராமத்தில் சுரேஷ்ராஜன் என்ற நபர் தனது மனைவி ஹெப்சிபாவைத்தான் இவ்வாறு கொடுமைப்படுத்தியுள்ளான். 15 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இப்படி பிரச்சினைகள் தொடர்ந்து வந்ததால் சைக்கோத்தனமாக சுரேஷ் செயல்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
https://twitter.com/dinakaranonline/status/1307258334529990659?s=20













