---Advertisement---

ஆபாச பேட்டி எடுத்தவர்கள் கைது

Published on: January 12, 2021
---Advertisement---

சமீபத்தில் 2021 புத்தாண்டையொட்டி ஜாலிக்காக ஒரு பேட்டி எடுக்கப்பட்டது. சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் எடுக்கப்பட்ட இந்த பேட்டி சர்ச்சையானது சமூக வலைதளங்களில் உலா வந்த பேட்டியில் பேசிய ஒரு பெண் படு கேவலமாக பெண்களே பேசத்தயங்கும் பல வார்த்தைகளை பேசி இருந்தார்.

எனக்கு மூணு ஆண், இருந்தாலும் பத்தாது என ஆபாசமாக பேசி அந்த பெண் பேசி இருந்த நிலையில் இது குறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பெண்ணிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்ததாக சென்னை டாக் யூடியூப் சேனலின் (Chennai Talk YouTube channel) தொகுப்பாளர் 23 வயதுடைய அசென் பாட்ஷா, கேமராமேன் 24 வயதுடைய அஜய் பாபு மற்றும் சேனல் உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.